வவுனியா,
ஈரப்பெரிய
குளம்
பொலிஸ்
சோதனைச்
சாவடியில்
வைத்து
கடந்த
12ஆம்
திகதி
பொலிஸ்
உத்தியோகத்தர்கள்
சந்தேகத்தின்
பேரில்
லொறி
ஒன்றை
சோதனை
செய்ததில்
பெருந்தொகையான
தொலைக்காட்சி
பெட்டிகளும்
அதற்குள்
அதி
முக்கியத்துவம்வாய்ந்த
தொலைத்தொடர்பு
உபகரணங்களும்
மறைத்து
வைக்கப்பட்டிருந்ததைக்
கண்டுபிடித்துள்ளனர்.
இவை
அனைத்தும்
புலிகளின்
கட்டுப்பாட்டிலுள்ள
வன்னிப்பிரதேசத்துக்குக்
கொண்டு
செல்லப்பட்டு
புலிகள்
இயக்கத்துக்கு
கொடுப்பதற்காக
இவ்வாறு
லொறிக்குள்
மறைத்து
வைத்து
கொண்டு
செல்லப்பட்டதாக
பொலிஸ்
உத்தியோகஸ்தர்கள்
தெரிவித்துள்ளனர்.
இந்தச்
சம்பவம்
பற்றி
மேலும்
தெரிவிக்கப்பட்டிருக்கும்
தகவலின்படி
மேற்படி
லொறி
கொழும்பிலிருந்து
புறப்பட்டே
இவ்வாறு
வன்னிநோக்கி
வந்துகொண்டிருந்ததாகவும்
மறைத்து
வைக்கப்பட்டிருந்த
அனைத்து
தொலைக்காட்சிப்பெட்டிகளும்,
தொலைத்தொடர்பு
உபகரணங்களும்
கொழும்பில்
வைத்தே
ஏற்றப்பட்டுள்ளன
எனவும்
பொலிஸ்
தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்
இவ்வாறு
மேற்படி
மறைத்துவைக்கப்பட்ட
பொருட்களுடன்
குறித்தலொறி
ஒன்று
வந்துகொண்டிருப்பதாக
முன்னரே
வவுனியா
பொலிஸ்
நிலையத்துக்கும்
ஈரப்பெரிய
குளம்
பொலிஸ்
சோதனைச்
சாவடிக்கும்
பொறுப்பான
பொலிஸ்
அதிகாரிகளுக்கும்
கொழும்பில்
இருந்து
தகவல்
கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத்
தகவலின்
அடிப்படையில்
எச்சரிக்கையுடன்
செயற்பட்ட
ஈரப்பெரியகுளம்
பொலிஸார்
காத்திருந்து
12ஆம்
திகதி
பிற்பகல்
மேற்படி
லொறியை
சந்தேகத்தின்
பேரில்
சோதனையிட்டுக்
கைப்பற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும்
குறித்த
லொறியை
பொலிஸார்
சோதனையிட்டபோது
அதற்குள்
உருளைக்கிழங்கு,
வெங்காயம்,
கடலை,
பருப்பு,பயறு
ஆகிய
அத்தியாவசியப்
பொருட்கள்
அடங்கிய
மூடைகளே
ஏற்றப்பட்டிருந்தன
எனவும்
இவற்றை
இறக்கிச்
சோதனையிட்டபோதே
இந்தப்
பொருள்
மூடைகளுக்குக்
கீழ்
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மறைத்து
வைக்கப்பட்டிருந்ததை
பொலிஸார்
கண்டுபிடித்ததாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,
பொலிஸார்
அந்த
தொலைக்காட்சிப்
பெட்டிகளை
கழற்றிச்
சோதனையிட்டபோது
அதற்குள்
முக்கிய
தொலைத்தொடர்பு
உபகரணங்கள்
பதுக்கி
வைக்கப்பட்டுள்ளதும்
கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு
32
தொலைக்காட்சிப்பெட்டிகள்
மறைத்து
வைக்கப்பட்டிருந்ததாகவும்
அதற்குள்
பெருந்தொகையான
தொலைத்தொடர்பு
உபகரணங்கள்
பதுக்கி
வைக்கப்பட்டிருந்ததாகவும்
பொலிஸார்
அறிவித்துள்ளனர்.
உண்மையில்,
அந்த 32
தொலைக்காட்சிப்பெட்டிகளையும்
அதற்குள்
வெடி
குண்டுப்
பொருட்கள்
வைக்கப்பட்டிருக்கலாம்
என்ற
சந்தேகத்திலேயே
தாம்
சோதனையிட்டதாகவும்
ஆயினும்
அதற்குள்
தொலைத்தொடர்பு
சாதனங்கள்
பதுக்கி
வைக்கப்பட்டிருந்ததாகவும்
பொலிஸ்
தரப்பு
குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு
கண்டுபிடிக்கப்பட்ட
தொலைத்தொடர்பு
உபகரணங்களைப்
பற்றிப்
பொலிஸார்
தெரிவித்திருக்கும்
விபரங்களுக்கேற்ப
30
மகலன்
வகை பி.பி.எஸ்.
இயந்திரங்கள்,
22
ஐகொம்
தொலைத்தொடர்பு
இயந்திரங்கள்,
487 ஐ.சி.வி.
82 வகை
ஐகொம்
இயந்திரங்கள்,
10 ஐ.சி.ஆர்.
20 வகை
ஐகொம்
இயந்திரங்கள்,
47
ஐகொம்
கையியந்திரங்கள்,
7 அலன்
வகை கை
இயந்திரங்கள்,
352
ஐகொம்
அன்டனாக்கள்,
45
வேறுவகை
அன்டனாக்கள்,
495
ஐகொம்
பதிவு
உபகரணங்கள்
மற்றும்
304
ஐகொம்
பற்றரி
கவர்கள்,
19
டேற்கேபிள்கள்
ஆகியன
பதுக்கி
வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு
புலிகள்
அமைப்பிற்காக
தொலைத்தொடர்பு
சாதனங்களைக்
களவாகக்
கடத்திச்
சென்ற
லொறியை
ஓட்டி
வந்த
சாரதியும்,
உதவியாளரும்
சிங்கள
இனத்தைச்
சேர்ந்தவர்களே
என
பொலிஸ்
அறிவித்துள்ளது.
இவர்களிடம்
பொலிஸ்
உத்தியோகத்தர்கள்
மேற்கொண்ட
தீவிர
விசாரணையிலிருந்து
கொழும்பில்
போதிராஜ
மாவத்தை
வீதியிலுள்ள
பிரபல
தமிழ்
வர்த்தகர்
ஒருவருக்குரிய
பண்டகசாலையில்
வைத்தே
மேற்படி
அத்தியாவசியப்
பொருட்களுடன்
சேர்த்து
குறித்த
தொலைக்காட்சிப்
பெட்டிகளும்
அதற்குள்
பதுக்கி
வைக்கப்பட்டிருந்த
தொலைத்தொடர்பு
உபகரணங்களும்
ஏற்றப்பட்டது
தெரியவந்துள்ளது.
மேலும்,
இவ்வாறு
அந்த
லொறியில்
அவை
ஏற்றப்படுவதற்கு
முன்னர்
தம்புள்ள
வியாபார
நிலையம்
ஒன்றில்
வைத்து
அரிசி
மூடைகள்
ஏற்றப்பட்டு
மஹரகமவிலுள்ள
வியாபார
நிலையம்
ஒன்றில்
இறக்கப்பட்டுள்ளன.
கொழும்பு
போதிராஜமாவத்தையில்
தமிழ்
வர்த்தகரின்
களஞ்சியத்தில்
ஏற்றப்பட்ட
பொருட்கள்
அனைத்தும்
புலிகள்
இயக்கத்தின்
கட்டுப்பாட்டிலுள்ள
வன்னிப்
பிரதேசத்துக்கு
கொண்டு
செல்வதற்காகவே
ஏற்றப்பட்டதாக
மேற்படி
சிங்கள
இனத்துச்
சாரதியும்
உதவியாளரும்
பொலிஸ்
தரப்பினர்
மேற்கொண்ட
தீவிர
விசாரணைகளின்
போது
தகவல்
கூறியுள்ளனர்.
இவர்கள்
இருவரும்
தற்போது
வவுனியா
பொலிஸ்
நிலையத்தில்
தடுத்து
வைக்கப்பட்டு
மேலதிக
புலன்
விசாரணைகளை
பொலிஸ்
உத்தியோகத்தர்கள்
மேற்கொண்டு
வருகின்றனர்.